பாடல் #516

பாடல் #516: இரண்டாம் தந்திரம் – 19. திருக்கோயிலிழிவு

கட்டுவித் தார்மதிற் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.

விளக்கம்:

திருக்கோயில் சுற்றுச்சுவரைக் கட்டியவரே பின்பு பொருள் மீது ஆசை கொண்டு அந்தச் சுவற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்தாலும் தவம் புரியும் முனிவரோ வேதங்களைச் சொல்லும் அந்தணரோ என கல்லை எடுத்தவர் யாராக இருந்தாலும் அவர்களையும் அந்தக் குற்றம் நிகழாதவாறு பாதுகாப்பாக வைக்காததால் அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசனையும் ஆகமங்களை அருளிச்செய்த சிவபெருமானின் ஆணை அழித்துவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.