பாடல் #489

பாடல் #489: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்
அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்
அதற்கது வாம்இன்ப மாவது போல
அதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.

விளக்கம்:

ஒரு விதை முதலில் முளைத்து செடியாய் வளர்ந்து பின்பு வேர் மண் மற்றும் நீருடன் வினைபுரிந்து தன்னைப்போலவே பலத்துடன் தன்னுடைய தன்மையுடன் பல செடிகளை புதர் போல் உருவாக்குகின்றது. ஒரு வகை செடி தனது வகை செடியை மட்டுமே உருவாக்கும் வேறு வகை செடியை உருவாக்காது. உலகத்தில் எத்தனை வகை தாவரங்கள் அதன் வகைகளை உருவாக்குகின்றதோ அத்தனை வகை தாவரங்களாகவும் ஆதியாய் இருக்கும் இறைவனே இருக்கின்றான்.

குறிப்பு: கர்ப்பக்கிரியை தலைப்பில் இதுவரை மனித உயிர்கள் எப்படி உருவாகின்றது என்று மட்டுமே சொல்லப்பட்டு இருந்தது. இந்த பாடலில் உலகில் உள்ள தாவரங்கள் உருவாக்கம் பற்றி அருளியிருக்கின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.