பாடல் #487

பாடல் #487: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)

இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்
துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்
முன்புற நாடி நிலத்தின்முன் தோற்றிய
தொன்புற நாடிநின்று ஓதலு மாமே.

விளக்கம்:

ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் உறவாடுகின்றார்கள். அவர்களின் உறவினால் துன்பத்தையே கொடுக்கும் பந்த பாசம் எனும் மாயையால் கட்டப்பட்ட கரு உருவாகி குழந்தையாக பிறந்து உயிராக வளர்கிறது. வளரும் அந்த உயிர் மாயையிலிருந்து விடுபட வேண்டும் என்று எண்ணினால் தன்னை உயிராகப் பிறக்க வைத்த இறைவன் ஒருவன் ஆதி காலத்திலிருந்தே எப்போதும் இருக்கின்றான் என்பதை உணர்ந்து அவனைத் தேடி அடைய ஆசைப்பட்டு அவனின் திருநாமத்தை (ஓம் நமசிவாய) மந்திரமாக ஓதி தியானத்தில் இருந்து அவனைத் தமக்குள்ளே அறிந்து மாயையிலிருந்து விடுபடலாம்.

குறிப்பு: உயிர்கள் தங்களுக்கு பிடித்த தனது இஷ்ட தெய்வத்தின் நாமத்தையும் மந்திரமாக ஓதி தியானத்தில் இருந்து அவனைத் தமக்குள்ளே அறிந்து மாயையிலிருந்து விடுபடலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.