பாடல் #437

பாடல் #437: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

ஒளித்துவைத் தென்னுள் ளுறவுணர்ந் தீசன்
வெளிப்பட்டு நின்றருள் செய்திடும் ஈண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.

விளக்கம்:

இறைவன் எமக்குள் மறைத்திருந்ததை அவனது திருவருளால் எமது உள்ளத்துக்குள்ளேயே உணர்ந்து வேண்டிட அவன் யாம் இருந்த இடத்திலேயே வெளிப்பட்டு நின்று அருள் புரிந்தான். எப்போதுமே தெகிட்டி விடாத பேரின்பத்தை வழங்கும் பெருமைக்குரிய இறைவனை உயிரின் உள்ளத்துக்குள் ஒளிந்து கொண்டு இருந்தாலும் உண்மையான அன்போடு உள்ளம் உருக வேண்டினால் தமக்கு முன்னால் வந்து நின்று அருள் புரிவதை உணரலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.