பாடல் #416

பாடல் #416: இரண்டாம் தந்திரம் – 10. திதி (வினைப் பயனாக அனைத்தையும் காக்கும் முறை)

அன்பும் அறிவும் அடக்கமு மாய்நிற்கும்
இன்பமும் இன்பக் கலவியு மாய்நிற்கும்
முன்புறு காலமும் ஊழியு மாய்நிற்கும்
அன்புற ஐந்திலும் அமர்ந்துநின் றானே.

விளக்கம்:

அனைத்து உயிர்களுக்குள்ளும் தோன்றும் உண்மையான அன்பாகவும் அறிவாகவும் அவை பெறும் ஒழுக்கமான அடக்கமாகவும் இருப்பவன் இறைவனே. நல் வினையால் உயிர்கள் பெறும் இன்பமாகவும் இன்பத்தில் மற்ற உயிர்களோடு கலக்கும் புணர்ச்சியாகவும் இருப்பவன் இறைவனே. உலகம் உருவான ஆதிகாலமாகவும் அந்த உலகம் இறுதியில் அழியும் ஊழிக் காலமாகவும் இருப்பவன் இறைவனே. அவனே உயிர்களிடத்தில் கொண்ட மாபெரும் அன்பினால் ஐந்து பூதங்களிலும் அமர்ந்து இருந்து உயிர்களை எப்போதும் காத்து அருளுகின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.