பாடல் #409

பாடல் #409: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
அப்பரி சேதென்று புகலும் மனிதர்
அப்பரி சேஇருளாய் மூடிநின் றாரே.

விளக்கம்:

இறைவன் உலகத்தில் பரிசாகக் கொடுத்தது என்பத்து நான்கு இலட்சம் வகை உயிரினங்களாகும். இந்த அனைத்து உயிர்களிலும் உண்மையான பரிசாக அவற்றுடன் கலந்து உயிராக நிற்பது இறைவனே ஆகும். ஆனால் இறைவனை தமக்குள் அறியாமல் ஆணவத்தால் அவன் எங்கே இருக்கின்றான் என்று கேட்கும் மனிதர்களை மாயை என்னும் ஆணவ இருளாய் உயிர்களுக்கு பரிசாய் இருக்கும் இறைவனே மூடியிருகின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.