பாடல் #385

பாடல் #385: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

விளக்கம்:

ஜோதி வடிவான இறைவனின் மாபெரும் சக்தியிலிருந்து ஒளியும் ஓலியும் தோன்றி இரண்டும் கலந்து அதிலிருந்து ஆகாயம் உருவாகியது. ஆகாயத்திலிருந்து காற்று உருவாகியது. காற்றிலிருந்து வெப்பம் (நெருப்பு) உருவாகியது. வெப்பம் குளிர்ந்து நீர் உருவாகியது. இவை நான்கும் கலந்து நிலம் உருவாகியது. இவை ஐந்தும் முழுமையடைந்து உலகம் உருவாகியது. பூவுக்குள் கலந்திருக்கும் தேன் போல உலகங்களில் பஞ்சபூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் கலந்திருக்கிறது.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.