பாடல் #382

பாடல் #382: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அண்டங்கள் அனைத்தும் உருவாகிய முறை)

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்றே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

விளக்கம்:

பாடல் #381 இல் உள்ளபடி பராபரையாகிய எண்ணத்தில் சுத்தமான ஒலியும் ஒளியும் இருக்கிறது. அந்த சுத்தமான ஒலி ஒளிக்கு சிவன் சக்தி என்று பெயர். அந்த பராபரையாகிய எண்ணம் ஒலி ஒளி என்று பிரிந்து இருப்பதற்கு காரணம் அசையாத அறிவு சக்தியில் இருந்து உலகை உருவாக்கும் செயல் சக்தி பிறப்பதற்காக. அசையாத அறிவு சக்தியில் அசைகின்ற எண்ண சக்தி கலக்க ஒலியும் ஒளியும் தோன்றுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.