பாடல் #369

பாடல் #369: இரண்டாம் தந்திரம் – 6. சக்கரப் பேறு (சக்கரத்தின் தத்துவம்)

கூறது வாகக் குறித்துநற் சக்கரம்
கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறது செய்து கொடுத்தனன் சக்திக்குக்
கூறது செய்து தரித்தனன் கோலமே.

விளக்கம்:

உலகைக்காத்து உலகத்தொழில்கள் சீராக நடைபெற இறைவன் தனது ஆற்றலின் ஒரு பகுதியில் சக்கரத்தை படைத்தார். தனது ஆற்றலின் ஒரு பகுதியான சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தாருளினார். திருமால் அந்த சக்கரத்தை தாங்கும் வலிமை பெறுவதற்காக தமது சக்தியிலிருந்து ஒரு பகுதியையே கொடுத்து அருளினார். தனது ஆற்றலின் ஒரு பகுதியாக இருந்த சக்கரமும் அதன் சக்தியையும் திருமாலுக்கு கொடுத்தாலும் சக்கரமும் அதன் சக்தியாகவும் இருப்பவர் இறைவனே.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.