மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #19

2-9-2006 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்பது பழமொழி என்றால் தேக உபத்திரவம் செய்வது நலம்தானா?

இதன் உண்மையான பொருளை அறிந்து கொண்டால் எளிதாகப் புரியும். அடி உதவுவது போல் என்கின்றதை தனியாக எடுத்துக் கொண்டால் கட்டையால் அடிப்பதோ கரங்களால் அடிப்பதோ அல்ல என்றும் இங்கு யாம் பணிவுடன் எடுத்துரைக்கின்றோம். அடி உதவுவது போல் என்றால் திருவடி உதவுவது போல் என்கின்ற பொருளாகின்றது. இறைவனுடைய பாதங்களைச் சரணடைந்தால் அதுவே போதுமானது. இது பெருமளவில் உதவும் உறவினர்களை விட பெரிதாக உதவும் என்பது பொருளாகின்றது.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் இதற்கு என்ன பொருள்?

மரத்தில் மறைந்தது மாமத யானை மரத்தை மறைத்தது மாமத யானை. உதாரணமாக கல்லில் ஒரு நாயின் சிலையை வடிவமைத்தால் குழந்தைகள் காண்பது நாயாகும். அவர்களுக்கு அந்த வினாடி கல் மறைந்து விடுகிறது. சிற்பி காண்பது கல்லாகும். சிற்பிக்கு நாய் மறைந்து விடுகிறது என்பதே பொருளாகின்றது. அவரவர் மனப்பான்மைக்கேற்பவே அனைத்தும் தோற்றமளிக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.