மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #49

26-9-2009 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

மகான்களை வணங்கி வருவதின் மூலம் தங்களுக்கு உடல் பாதிப்புகள், கடினங்கள் ஏதும் வராது என்று சிலர் நம்புகின்றனர், இது சரியா?

அவ்வாறு நம்புவது சரியானது இல்லை. அவரவர் கர்ம நிலைகளால் உடல் பாதிப்புகளும் சில கடினங்களும் வந்தே தீரும். இதற்கு விதி விலக்கு இல்லை. மகான்களும் இவ்விதம் தங்களின் கர்மங்களைத் தீர்த்திடவே நோய்களைத் தாங்கிக்கொண்டனர். இது அனைவரும் அறிந்ததே இவ்விதமே அவர்களுக்கும் கடின காலங்கள் வந்து செல்லும். பின்பு மகான்களுக்கும் சாதாரன மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அத்தகைய கடினங்கள் மகான்களை பாதித்ததில்லை. ஏனெனில் அவர்களின் மனநிலைகள் உடலை விட்டு மேல் நிலையில் இருந்தது. இவ்விதம் மாறிட முயற்சிகள் வேண்டும். மகான்களை பின்பற்றினால் கடினங்கள் வரக்கூடாது என்றும் உடல் உபாதைகள் நேரிடக்கூடாது என்றும் குடும்பத்தில் அசுபங்கள் (கெட்ட நிகழ்வுகள்) நேரிடக்கூடாது என்றும் எண்ணுவது பெரும் தவறாகும். இயற்கை எப்போதும் இயற்கையாகவே இருக்கும். அதற்கு விதி விலக்கு இல்லை என்பதை நன்கு அறிதல் வேண்டும். மகான்களை பின்பற்றுவது பின்பற்றுவோர்களது நிலையை உயர்த்தி எவ்வித பாதிப்பும் இல்லாத அளவில் மனநிலை வேண்டும் என்ற நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.