பாடல் #520

பாடல் #520: இரண்டாம் தந்திரம் – 20. அதோமுக தரிசனம்

எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று
வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல
அம்பவழ் மேனி அறுமுகன் போய்அவர்
தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

விளக்கம்:

தேவர்களை விட அசுரர்கள் வலிமை பெற்றுத் தேவர்களை துன்புறுத்திட தேவர்கள் சிவபெருமானை நோக்கி எம்பெருமானே இறைவா நாங்கள் அசுரர்களால் துன்பப்படுகின்றோமே இது சரியா எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறி வேண்டிட சிவபெருமான் தற்பரன் நிலையில் நின்று (நெற்றிக் கண் நெருப்பால் அனைத்தையும் அழித்துத் தானே அனைத்திற்கும் மேலானவன் நிரந்தரமானவன் ஆனந்தமானவன் எதனாலும் அழிக்க முடியாதவன் என்கின்ற நிலை) தன் இதயத்திலிருக்கும் ஒளியாகிய அழகிய பவளம் போன்ற திருமேனியுடைய ஆறுமுகனை யாம் அளிக்கும் படையுடன் சென்று தேவர்களின் பகைவர்களான அசுரர்களை அழித்து வருவாயாக என்று கூறினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.