அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #74

30-1-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீக பாதையில் செல்ல குருவிடம் சரணாகதி ஆன பின்பும் ஏன் வெறுமை நிலை ஏற்படுகிறது?

பொதுவாக சரணாகதி நிலையும் குரு அருளும் குருவின் மீது விடா சிந்தனையும் நிலைத்திட அங்கு வெறுமைக்கு இடமில்லை. ஏனென்றால் அத்தகைய நிலை பேரானந்தம் கொடுக்க வேண்டும். இவ்விதம் ஆனந்தம் கொடுக்கும் நிலையில் வெறுமைக்கு அங்கு இடம் இல்லை அவ்விதம் வெறுமை கொண்டு விட்டால் தவறு உன்னுடையதே. ஏனெனில் இன்னும் முழுமையாக ஆசாபாசங்களை விடாநிலையில் இமயம் ஏறுதல் வேண்டும் என எண்ணம் படைத்தாய். இதனை மாற்றிக் கொண்டு சரணாகதி முழுவதாகவும் பக்தியினை வளர்த்தல் வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.