அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #73

3-1-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

காலம் என்பது என்ன?

இதனை கூறுவது மிகவும் கடினமாகும். மானிட அளவில் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள் என்றெல்லாம் பிரித்து வைத்துள்ளனர். இருப்பினும் எக்காரியம் எக்காலத்தில் சாதித்தல் வேண்டும் என்பது ஓர் கேள்விக்குரியாகவே எப்பொழுதும் உண்டு. இந்நிலையில் கால வரம்பினை நாம் நிர்ணயிக்க இயலாது. இக்கால வழிகளில் இப்பணிகள் அப்பணிகள் என்று பிரித்து குறிப்பிட்ட காலத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கணக்கிடுகின்றார்கள். இக்குறிப்பிட்ட காலத்தில் இப்பணிபுரிதல் செய்ய வேண்டும் என்றால் அக்காலத்திற்கு ஓர் சக்தி தானாக பெறுதல் வேண்டும். அச்சக்தி இறையருள் ஆகும். இத்தகைய நிலையில் காலத்தை வீணாக்குதல் என்பது ஓர் மாபெரும் குற்றமாகும், குறிப்பாக ஆன்மீக பாதையில் செல்வோர் அங்கும் இங்கும் அலைந்து இருக்கும் இடத்தை விட்டும் ஓடி அலைந்தும் காலத்தை வீணாக்கிட்டால் அப்பொன் போன்ற காலங்கள் மீண்டும் கிடைக்காது என்பதை உணர வேண்டும் இதை யாம் மட்டும் கூறுவது அல்ல ஆன்மீக நிலையில் உயர்ந்தோரின் கருத்தும் ஆகும் இதனை மனமதில் வைத்து செயல்படுவது நன்றே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.