அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #53

12-5-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நகைச்சுவை தரும் வினா ஒன்றும் ஒருத்தர் வினாவிட்டார் உலகில் நாய் என்பது அவ்வளவிற்கு கேவலமானதா? அதில் ஈஸ்வரன் இல்லையா?

இக்கேள்விக்கு மூல காரணம் ஓர் பழமொழியே நாயைக் கண்டால் கல்லை காணவில்லை கல்லை கண்டால் நாயை காணவில்லை என்பதே அப்பழமொழியாகும் நாயைக் கண்டவுடன் அடித்தல் வேண்டுமோ இது என்ன எண்ணம். அவ்விதமில்லை இதற்கு விளக்கமாவது ஓர் நல்ல கல்லால் உருவாக்கிய நாய் பொம்மை ஒன்றை குழந்தை கண்டால் அதனை நாயாகவே காணும் கல்லின் தரத்தை குழந்தை காண்பதில்லை மாறாக சிற்பியோ கல்லின் தரமும் அதன் மெருகும் மட்டும் காண்கின்றான். சிற்பி நாயை காண்பதில்லை இதற்கு ஈடாகவே திருமந்திரத்தில் மரத்தில் மறைந்தது மாமதயானை என்னும் பாடல் உள்ளது. இதன் விளக்கம் இதுவேயன்றி கண்டவுடன் நாயை அடித்தல் வேண்டும் என்பதல்ல.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.