அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #47

16-7-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

கடைத்தேங்காய் வழிப்பிள்ளையாருக்கு என்ற வாக்கியத்திற்கு முழு அர்த்தம் என்ன?

மற்றவர்கள் பொருட்களை அபகரித்து தெய்வத்திற்கு அளிப்பது சிறந்ததல்ல என்பதே கருத்தாகின்றது. தன் உழைப்பில் சேமித்ததை தெய்வத்திற்கு அளிப்பதே சிறப்பாகின்றது. பல தவறுகள் செய்த பின் இறைவன் காப்பான் என எண்ணம் பலருக்கு உண்டு. கலியுகத்தில் இவ்விதம் ஓர் தோற்றமும் காணக்கூடும். இதைக் கண்டு மற்றவர்களும் தீயோருக்குரிய காலம் அவர்களே வாழ்கின்றனர் என கூறுகின்றனர். இது அவ்விதம் இல்லை நவீன கால அசையும் படங்களில் (சினிமா) நீங்களும் வசனங்களை கேட்டிருப்பீர்கள் தீயோரை ஆண்டவன் கைவிடுவான் என்பதும் உறுதியாக நல்லோரை சோதிப்பான் கைவிடமாட்டான் என்பதே இதன் பொருளாகின்றது. இவ்விதமிருக்க தீமை வழியில் சென்றால் லாபங்கள் உண்டாகும் என இளைஞர்கள் எண்ணுதல் தவறாகும் இவ்விதம் சென்றிட நஷ்டங்களே நேரிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.